search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் மாணவி கற்பழிப்பு"

    பீகாரில் 12 வயது மாணவியை பள்ளி முதல்வர் ஆபாச படம் எடுத்து மிரட்டி 3 மாதமாக கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GirlMolestedCase
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் ராஜ்சிங்கானியா (வயது 28) என்பவர் தனியாக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அவரே பள்ளி முதல்வராகவும் இருக்கிறார்.

    இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு வரை உள்ளன. 90 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதில் 12 வயது மாணவி ஒருவரை பள்ளி முதல்வர் ராஜ்சிங்கானியா அடிக்கடி தனது அறைக்கு அழைத்து மாணவி வீட்டு பாடங்களை சரியாக செய்திருக்கிறாரா? கையெழுத்து சரியாக இருக்கிறதா? என ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அப்போது அந்த மாணவியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார். நாளடைவில் அந்த மாணவியை கற்பழித்தார். இதற்கு அந்த பள்ளியின் கணக்காளர் அபிஷேக்குமார் (26) என்பவரும் உடந்தையாக இருந்தார்.

    முதல்வர் ராஜ்சிங்கானியா மாணவியை கற்பழிக்க அதை அபிஷேக்குமார் செல்போனில் படம் பிடித்தார். 3 மாதமாக கற்பழிப்பு தொடர்ந்தது. கணக்காளர் அபிஷேக்குமாரும் மாணவியிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டார்.

    அந்த மாணவியிடம் இந்த சம்பவங்கள் குறித்து வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் ஆபாச படத்தை காட்டியும் மிரட்டினர்.

    இதற்கிடையே அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. எனவே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதுபற்றி பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் ராஜ்சிங்கானியா, கணக்காளர் அபிஷேக்குமார் இருவரையும் கைது செய்தனர்.

    கடந்த ஜூலை மாதம் இதேபோல பீகாரில் 2 பள்ளியில் மாணவிகளை கும்பலாக கற்பழித்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. #GirlMolestedCase
    ×